economics

img

ஜி.எஸ்.டி வசூல் ரூ.2.01 லட்சம் கோடியாக உயர்வு!

மே மாதத்தின் ஜி.எஸ்.டி வசூல் ரூ.2.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 
ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த மே மாதத்தின் ஜி.எஸ்.டி வசூல் ரூ.2.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி-ஐ விட 16.4% அதிகமாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடியாக இருந்தது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்துள்ளது.
அதேபோல், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1.50 லட்சம் கோடியும், இறக்குமதி பொருட்கள் மூலம் ரூ.51,266 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.