மே மாதத்தின் ஜி.எஸ்.டி வசூல் ரூ.2.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த மே மாதத்தின் ஜி.எஸ்.டி வசூல் ரூ.2.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி-ஐ விட 16.4% அதிகமாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடியாக இருந்தது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்துள்ளது.
அதேபோல், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1.50 லட்சம் கோடியும், இறக்குமதி பொருட்கள் மூலம் ரூ.51,266 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.