அடுத்த நிதி நெருக்கடி தனியார் கிரிப்டோகரன்சியால் வரும் என்று ஆர்.பி.ஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் பி.எஃப்.எஸ்.ஐ இன்சைட் உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய ஆர்.பி.ஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், அடுத்த நிதி நெருக்கடி தனியார் கிரிப்டோகரன்சியால் வரும் என்று தெரிவித்தார். மேலும், தனியாரிடம் உள்ள மெய்நிகர் நாணயங்களை (virtual currencies) தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.