districts

img

தனியார் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சிஐடியு போராட்டம்

செங்கல்பட்டு,ஜூலை 18- செங்கல்பட்டு மாவட்டம்,  செங்குன்றம் தொழிற் பேட்டை  டீஜிங் மொப்பார்ட்ஸ் தனியார் நிறுவனத்தில் ஊதியம், வைப்பு நிதி வழங்க வேண்டும், பணி நீக்கத்தை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 18) ஊழியர்கள் குடும்பத்து டன் தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மேலும் இந்த நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தெரியாமல் இயந்திரங் களை வெளியே எடுத்து செல்லும் பணியை மேற் கொண்டுள்ளது. ஆகை யால் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பண பயன்களை பெற்றுத்தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடராஜன் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட தலைவர் கே.சேஷாத்ரி பேசினார்.