districts

img

 மின் ஊழியரை தாக்கியவர் கைது

செங்கல்பட்டு, ஜன. 30- பணியிலிருந்த மின் ஊழியரை தாக்கியவரை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தொடர் போராட்டத்திற்கு பின்னர் காவல் துறை கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் மின் பிரிவு அலுவலகத்தில் கணக்கீட்டு அலுவலராக முத்துராமன் என்பவர் பணி செய்து வருகின்றார். இவர் கடந்த 8ம் தேதி கோவளம் அடுத்த பேரூர் பிள்ளையார் கோயில் தெரு வில் ஒரு வீட்டில் கணக்கீடு பணி செய்யும்போது வீட்டு உரிமையாளர் லோகமுத்து மின் கட்டணத்தை குறை வாக பதிவு செய்திடுமாறு வலியுறுத்தியுள்ளார். இதற்கு மின் கணக்கீட்டு அலுவலர் முத்துராமன் மறுப்பு தெரி வித்த நிலையில்  அவரை லோகமுத்துவும் அவரது உறவி னர்கள் இருவரும் கட்டையால் தாக்கியுள்ளனர்இதில் படு காயம் அடைந்த முத்துராமன் செங்கல்பட்டு அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதே போன்று கருங்குழி மின் பிரிவு ஊழியர் லோ கேஸ்வரன் பணியிலிருந்தபோது தாக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்யாத காவல் துறையை கண்டித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத மின்வாரிய உயர் அலுவலர்களை கண்டித்தும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். மேலும் வரு கின்ற செவ்வாயன்று (பிப் .2) மின் ஊழியர்களை தாக்கிய குண்டர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் செங்கல்பட்டு திட்டத் தலைவர் என்.பால்ராஜ், பொறியாளர் பிரிவு செயலாளர் மயில்வாகனன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சுபாரதி அண்ணா, மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர் ஆகி யோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர் இதனைத் தொடர்ந்து மின் ஊழியரை தாக்கிய லோகமூர்த்தியை கைது செய்திருப்பதாக அவர் கூறினார். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.