districts

img

புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்குக: விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் வேண்டுகோள்

செங்கல்பட்டு, டிச.15- மாண்டஸ் புயல் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முழுமையாக கணக் கெடுப்பு எடுக்க வேண்டும் என விவ சாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர்  கூட்டம்  மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஆதார் மற்றும் வங்கி கணக்கை இணைப்பதற்கான பணி களில் மாவட்ட வேளாண் துறை சரியாக செயல்படவில்லை என குற்றம் சாட்டினர். மாவட்டத்தில் பயன் பெற்றுவரும் 32 ஆயிரம் பேரில் தற்போது 8 ஆயிரம் பேர் வரை சரியான  தகவல் தராததால் இறுதி நாளான டிசம்பர் 15 வரை பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வரு வதாகவும் தெரிவித்தனர். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மற்ற அலுவலர்கள் மதிப்பதில்லை.  மாவட்டத்தில் தொடர்ந்து ஏரிகளில் வண்டல் மண் எடுப்பதற்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும், நடவு இயந்திரம், களை பறிக்கும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க வேண்டும், மேலும் பல்வேறு துறை உயர் அலுவலர்கள் விவ சாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வருவதில்லை, மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் இருந்து நீர் செல்லும் கால்வாய்களை பராமரிக்க வேண்டும், வாயலூர், வல்லிபுரம் தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவ சாயிகள் பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர், நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றப்படும், கூட்டத்தில் கலந்து கொள்ளாத துறைசார் அலுவலர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும், விவசாயிகளின் குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தெரிவித்தார்.