districts

img

எஸ்.ஆர்.எம் கல்லூரி பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு, நவ. 21- செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங் குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா திங்களன்று (நவ.21) நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்று 1214 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரி வேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் ரவி பச்சைமுத்து, தாளாளர் ஹரினி, கல்லூரி யின் முதல்வர் வாசுதேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் ரவி பச்சைமுத்து, கல்லூரியின் தாளாளர் ஹரினி, முதல்வர் வாசுதேவராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் மதியழகன், துறைத் தலை வர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.