districts

img

தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

செங்கல்பட்டு, டிச,15- போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்தும் 7ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய முறை யில் பணி செய்யும் செவி லியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு எம்ஆர்பி செவி லியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி எம்.ஆர்.பி செவிலியர்க ளுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலி பணியிடங்களை உரு வாக்க வேண்டும், காலியாக உள்ள 2500 பணி யிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைளை வலியுறுத்தி நடை பெற்ற இந்த போராட்டத்தில் வட்டத் தலைவர் எஸ்.தரணி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள்  தன சேகர்,  திவ்யாதேவி, பிரபா தேவி,  தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி துறை  பொது செயலாளர் தாமோதரன், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு செயலாளர் பேபி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் விக்டர்சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.