செங்கல்பட்டு,நவ.2- கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் மனிஷா இவர் , திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். கர்ப்பிணி யான இவர் எட்டு மாத ங்களே நிறைவு பெற்று இருந்த நிலையில் திடீரென, விஷக்காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் ஏற்பட்ட தோடு மயக்கநிலையில் செங்கல்பட்டு அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். மகப்பேறு மருத்துவ மனையில் உள்ள பிரசவ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். சிடி ஸ்கேன் எக்ஸ்ரே முதுகுத்தண்டு நீர் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பரி சோதனைகளும் செய்யப் பட்டது. கடுமையான மூளைக் காய்ச்சல் மூளை அழற்சி, சுவாச செயலிழப்பு, சுவாச செயல் இழப்பு காரணங்க ளால், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உடனடி யாக அவசர அறுவை சிகிச்சை மூலம் 2.4 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் தாய் மனிஷா மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவில் அனும திக்கப்பட்டு சிறப்பு மருத் துவ குழுவால் தினமும் தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வந்தார். 44 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டு சுவாசம் சீர் படுத்தப்பட்ட பின்னர் 19 நாட்கள் உயர் சார்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மகப்பேறு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு மருத்துவ குழுக்களின் ஆலோசனை மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் நாராயணசாமி மற்றும் நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் 33 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்பு தாயும் சேயும் புதனன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகை யில், தொடர் சிகிச்சையின் காரண மாக தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முடிந்தது. பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தாய் கண்காணிக்கப்பட்டு, இதற்காக ஒவ்வொரு குழு தலைவர்கள் மற்றும் குழுவில் பணியாற்றிய இளம் மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி னார்.