districts

img

மாவட்ட நீதி மன்றங்களில் அடிப்படை வசதிகளை செய்திடுக வழக்கறிஞர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

செங்கல்பட்டு, நவ. 26- செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்ட 5வது மாநாடு செங்கல் பட்டில் அமைப்பு குழுத் தலைவர் எ.கருணாநிதி தலைமையில் நடை பெற்றது. ஜோஸ்பின் விஜி வர வேற்றார். மாநில செயல் தலைவர் எ.கோதண்டம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநிலக்குழு உறுப் பினர் ஜெ.பிரதாபன், செங்கல்பட்டு பார்  அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் ஸ்டீபன் சி. குமார் ஆகியோர் பேசினர்.  மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ருத்ரநாத்  தீர்மானங்களை முன்மொழிந்தார். மாநாட்டை நிறைவு செய்து அகில  இந்திய துணைத் தலைவர் ஜி.சம்கி ராஜ் பேசினார். மு.முனிச்செல்வம் நன்றி கூறினார். இளம் வழக்குரைஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட  வேண்டும், பெண் வழக்கறிஞர்க ளுக்கு தனி ஓய்வறை அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
23 பேர் கொண்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டக்குழுவின் தலை வராக எ.கருணாநிதி, செயலாளராக எஸ். ருத்ரநாத், பொருளாளராக ஜெ.  ஜோஸ்பின் விஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.