districts

img

வேதகிரி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

செங்கல்பட்டு,ஏப்.5- தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவரும், தமுஎகச செங்கல்பட்டு கிளை பொருளாளருமான  தோழர் வேதகிரி டெல்லியில் நடைபெற்ற பேரணிக்கு சென்ற இடத்தில்  மாரடைப்பால் திங்களன்று  அமிர்தசரசில்  காலமானார். புதனன்று (ஏப் 5) செங்கல்பட்டு வந்த டைந்த அவரது உடல் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு அனைத்து துறை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின்  மாநிலத் தலைவர்.என்.எல்.ஸ்ரீதரன்,பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, துணைத் தலைவர் இளமாறன்,  ஊரக வளர்ச்சி துறை ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில குழு உறுப்பினர்கள் ஆறு முகநயினார், இ.முத்துக்குமார், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், க.புருசோத்தமன், செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன், க.பகத்சிங் தாஸ், என்.பால்ராஜ்(சிஐடியு), இ.சங்கரதாஸ், கவி சேகர் (தமுஎகச), மருதன், சி.முகமது உசேன் (அரசுஊழியர்சங்கம்) உள்ளிட்ட சகோதர அமைப்புகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல்  செங்கல்பட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.