districts

img

பாதிக்கப்பட்டவர் மீதே வழக்கா? ஆய்வாளரை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்

செங்கல்பட்டு, ஏப். 16 - சாதி ஆதிக்க சக்தியி னரால் தாக்கப்பட்ட தலித் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் அசோகனை கண்டித்து வெள்ளியன்று (ஏப் 15) செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு வட்டம், ஆத்தூர் வடபாதி அம்பேத் கர் நகர் பகுதியில் முருகன்,  அவரது சகோதரர் கரண்  ஆகியோர் வசிக்கின்றனர். இவர்கள் மீதும், மாணவர் கள் மீதும், நில உரிமையார் பெருமாள் மற்றும் அவருடைய உறவினர்கள் அண்மையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆயுதங்களுடன் சென்று சாதிப் பெயரை குறிப்பிட்டு இந்த தாக்குதலை நடத்தி யுள்ளனர். இந்த கொலைவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் கடந்த பிப்.7ந் தேதி இணையம் மூலம்  புகார் தெரிவித்தும் செங் கல்பட்டு காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாறாக,  பாதிக்கப்பட்ட தலித் மக்கள்  மீது பெருமாள் கொடுத்த பொய் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ஒரு தலைபட்சமாக செயல்பட் டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக் கவில்லை. இந்நிலையில்  பெருமாள் மீதும், ஒரு தலைபட்சமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் அசோ கன் மீதும் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகள் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்ய  வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்னணியின் வட்டத் தலைவர் எம்.ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் கே.வாசுதேவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு. பாரதிஅண்ணா, திரா விடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் அ.செம்பியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செய லாளர்கள் ராஜ்குமார், சாந் தன், மாநில துணை பொதுச் செயலாளர் ப.செல்வன், வட்டசெயலாளர் முத்திரு ளப்பன், வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் கே.வேலன், நகர செயலாளர் அன்பு உள்ளிட்டோர் பேசினர்.