செங்கல்பட்டு, ஜூலை 6-
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2021 ஜனவரி மாதம் முதல் 2024 பிப்ரவரி 24 ஆம்தேதி வரை 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் 1,391 பேர் கருத்தரித்த தாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய
வந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபாகர் என்ற வழக்கறிஞர் விண்ணப்பித்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த அதிர்ச்சி தகவல் பெறப் பட்டுள்ளது
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2021ஆம் ஆண்டு 482 பேரும், 2022ஆம் ஆண்டு 508 பேரும், 2023ஆம் ஆண்டு 353 பேரும், 2024ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ர வரி மாதங்களில் 48 பேரும் என மொத்த மாக 18 வயதிற்கு உட்பட்ட 1,391 பெண்கள் கருத்தரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மாநிலம் முழுவதும் 2021ஆம் ஆண்டு 14,031 பேரும், 2022ஆம் ஆண்டு 10,901 பேரும், 2023ஆம் ஆண்டு 9,565 பேரும், 2024ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 1,637 பேரும் என மொத்தமாக 18வயதுக்குட்பட்ட 36 ஆயிரத்து 134 பேர் கருத்தரித்த்தாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது சுகாதாரத் துறை தெரி வித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டு 21 திருமணங்களும், 2023ஆம் ஆண்டு 13 திருமணங்களும் என மொத்தம் 34 குழந்தைத் திரு மணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, 10 வழக்குகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
அதேபோல் மாநிலம் முழுவதும் 2021ஆம் ஆண்டு 2,638 குழந்தை திரு
மணங்கள் தடுக்கப்பட்டு 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 2022ஆம் ஆண்டு 2,041 திருமணங்கள் தடுக்கப்பட்டு 881 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 1,961 திருமணங்கள் தடுக்கப்பட்டு 973 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் மட்டும் 347 திருமணங்கள் தடுக்கப்பட்டு 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.