districts

img

புயல் பாதித்த மீனவ கிராமங்களில் மீன்வளத்துறை அமைச்சர் ஆய்வு

கல்பாக்கம், டிச .12- செங்கல்பட்டு மாவட்ட த்தில் மாண்டஸ்புயல் கரையை கடந்த மாமல்ல புரம், கிழக்கு கடற்கரை சாலை மீனவர் குப்பம் பகுதி களில் உள்ள சின்னகுப்பம்,வடபட்டினம்,புதுபட்டினம், உய்யாளிகுப்பம் பகுதிகளில் மீன்வளத்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணன் திங்களன்று   மீனவ பகுதிகளை பார்வை யிட்டு  பாதிப்புகளை கேட்ட றிந்தார். மீனவ பகுதிகளில் பாதிப்புகள் குறித்தும், கேட்டறிந்த பின்னர் மீனவர்களிடம் மனுக் களை பெற்றார். செய்தி யாளர்களிடம் பேசிய அவர் புயலின் பாதிப்பால் மீனவர்களின் வலை கள்,படகுகள் சேத மடைந்துள்ளன. உயர்நீதி மன்றத்திலே பசுமை தீர்பாயத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிந்த பின்னர் மீனவர்களுக்கான தூண்டில் வளைவு அமைப்பது, கடற்பகுதியில் சுற்றுச்சுவர் அமைப்பது போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.  இந்த சந்திப்பின் போது  மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உள்ளிட்ட பலர் இருந்தனர்.