செங்கல்பட்டு, டிச. 23- செங்கல்பட்டு மாவட்டம், திருமணியில் குழந்தைகளுக்கான தடுப்பூசி, மஞ்சள் காமாலை, வெறிநாய்கடி, தட்டம்மை தடுப்பூசி போன்ற ஒன்பது வகையான தடுப் பூசிகள் உற்பத்தி செய்ய திறன்படைத்துள்ள ஒன்றிய அரசு நிறுவனமான எச்எல்எலில் சிஐடியு சங்கம் துவங்கப்பட்டுள்ளது. இந்நிறுனத்திற்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்துள்ளனர். புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஹச்எல்எல் பயோடெக் எம்ப்ளாயிஸ் யூனியன் சிறப்புத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி, தலை வராக எம்.விநாயகமூர்த்தி, பொதுச் செயலாளராக டி.எல்லப்பன், பொருளா ளராக எஸ்.பழனி, துணை தலைவர்களாக க.பகத்சிங்தாஸ்,.திலிப் ராஜா, செயலா ளர்களாக ஆர்.ரவிக்குமார், சௌந்தர ராஜன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையொட்டி சங்க கொடியேற்றம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா வெள்ளி யன்று (டிச.23) நடைபெற்றது. சங்கத்தின் கொடியை சிஐடியு மாநில துணைத் தலைவர் விஜயன் ஏற்றி வைத்தார். சிஐடியு செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் க.பகத் சிங்தாஸ், மாவட்ட துணைத் தலைவர் பழனி ச்சாமி, சிஐடியு நிர்வாகிகள், மயில் வாகனன், மங்கையர்கரசி, செல்வகுமார், யோபுராஜ், ஆகியோர் கலந்து கொண்ட னர்.