districts

img

காட்டுப்பன்றிகளால் விவசாயம் பாதிப்பு மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு

செங்கல்பட்டு,ஜூன் 21-  காட்டுப் பன்றிகளால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யரிடம் விவசாயிகள்  முறை யிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் வெள்ளியன்று (ஜூன் 21) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயி கள் கலந்து கொண்டு சுமார் 125 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

விவசாயிகளின் முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு,

 விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் நீர்நிலை களை தூர்வாரி சரி செய்து தர வேண்டும். காட்டுப்பன்றி, மயில், மான்கள் தொல்லை யிலிருந்து விவசாய நிலங்களை பாது காக்க வேண்டும், இதனால் ஏற்பட்ட பாதிப்புக்க ளுக்கான நிவாரணம் வழங்கிட வேண்டும், ஏரிகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும், பல்வேறு கிராமப் பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அவற்றை சரி செய்து தர வேண்டும், மதுராந்தகம் ஏரியில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த னர் இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சி யர் மதுராந்தகம் ஏரியில் தூர்வாரம் பணிகள் விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்கப்படும் மேலும் இரவு பகலாக கூடுதல் பணியாளர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறையி னருக்கு உத்தரவிட்டார் விவசாயிகள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது அரசு அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், வேளாண்மைத் துறையின் சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 3 விவ சாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதை மூட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.