செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடலூர் ஊராட்சியில் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க உள்ள ஆலிகுப்பம், பெரியகுப்பம் மற்றும் சின்னகுப்பம் பகுதிகளை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் ஆகியோர் சனிகிழமையன்று (மே 21) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.