அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒன்றிய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு துணைத் தலைவர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் நிர்வாகிகள் பன்னீர் செல்வம், கே.வி.வேதகிரி, ஜோதிமணி, அருணாசலம், பிவி.ராமமூர்த்தி, வாசுதேவன், வெங்கடேசன், கமலக்கண்ணன் (சிஐடியு) உள்ளிட்ட பலர் பேசினர்.