districts

img

பழுதடைந்த சாலை: சீரமைக்காத அதிகாரிகள் கை கொட்டி சிரிக்கும் போராட்டம்

செங்கல்பட்டு, பிப். 7- செம்பாக்கம் கிராமத்தில் பழுதடைந்து கிடக்கும் சாலையை செப்பனிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக் ்கான சங்கத்தின் சார்பில் கை கொட்டி  சிரிக்கும் போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட செம்பாக்கம் கிராமத்திலிருந்து அச்சரவாக்கம், அகரம் வழியாக மானாமதி வரை செல்லக்கூடிய சாலை கடந்த 15 ஆண்டுகளாக சீரமை க்கப்படாமல் பழுதடைந்துள்ளது. இந்த சாலை வனத்துறைக்கு சொந்த மான இடத்தில் செல்வதால் வனத்து றையின் அனுமதி கிடைக்காததால் சாலை சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. செம்பாக்கத்தில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு செல்லும் பிரதான சாலை என்ப தாலும், மூன்று கிராமங்களை இணை க்கும் முக்கிய சாலை என்பதாலும் நாள்தோறும் ஏராளமான மக்கள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து அரசு அலுவலகங்களுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

15 ஆண்டுகளாக சாலை செப்பனிடப்படாமல் இருப்பதால் சாலை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சாலை யை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி வாலிபர்கள், மாற்றுத்திற னாளிகள் இந்த போராட்டத்தில் ஈடு பட்டனர். வாலிபர் சங்க நிர்வாகி பி.விக் னேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன்,  சிஐடியு மாவட்டச் செயலாளர் க.பகத்சிங் தாஸ், சிபிஎம் பகுதிச் செயலாளர் எம்.செல்வம், விதொச ஒன்றியச் செயலாளர் பொன்னப்பன், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி பூபதி,என்.விக்னேஷ், வாலிபர்சங்க ஒன்றிய தலைவர் உத்தர குமார், கிராம இளைஞர்கள், தனசேகர், புனிதவேல், பார்னிஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.