செங்கல்பட்டு, நவ. 14- பாலாற்றின் நடுவே தீவு போல் அமைந்துள்ள இரும்புலிச் சேரி கிராமத்திற்கு செல்லும் தற்காலிக பாலம் சேத மடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே பாலாறு இரண்டாக பிரிந்து செல்கிறது. இப்பகுதியில் தீவு போல் இரும்புலிச்சேரி, எடை யாத்தூர் ஆகய ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி தீவாக அமைந்துள்ளது. இப்பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இரும்புலிச்சேரி கிராமத்திற்கு செல்ல திருக்கழுக்குன்றத்தில் இருந்து நெரும்பூர் வாயலூர் சாலையிலிருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பாலம் கடந்த 2015ம் ஆண்டு பெய்த பெரு மழையின் போது அடித்துச் செல்லப்பட்டது. இத னால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் படகு மூலம் கொண்டு செல்லப்பட்டது. பாலாற்றில் வெள்ள நீர் வடிந்த பின்னர் அப்பகுதி மக்க ளின் அவசியம் கருதி வீராணம் குழாய்கள் பதித்து தற்காலிக தரைப்பாலம் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் பழு தடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது பெய்து வரும் பருவ மழையினால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் இரும்புலிச்சேரி க்கு செல்வ தற்காக அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சேத மடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த தரைப்பாலம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தரைப்பாலத்திற்கு பதிலாக நிரந்தர பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.