செங்கல்பட்டு, பிப். 16 – செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கொலை செய்யப்பட்ட சிறுவன் கோகுல் ஸ்ரீ வழக்கு குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் திடீர் ஆய்வு மேற்கொண்டது. செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் 30 தேதியன்று கோகுல் ஸ்ரீ (17) சிறுவன் காவலர்களால் அடித்து சித்திரவதை செய்து கொலை செய்யப் பட்டார். இது சம்பந்தமாக ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் படுகொலை செய்யப்பட்ட கோகுல்ஸ்ரீ யின் குடும்பத்திற்கு ரூ10 லட்சம் மற்றும் ஒரு வீடு வழங்கியுள்ளது. இந்நிலையில் வியாழனன்று (பிப்.16) தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் செங்கல்பட்டில் செயல்பட்டுவரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப் பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்த னர். இல்லத்தில் சிறுவர்கள் தங்குமிடம், வகுப்பறைகள், உணவுக் கூடம் ஆகிய வற்றை ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், சிறுவன் கோகுல்ஸ்ரீயின் மரணம் குறித்தான வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணை யம் தாமாக முன்வந்து எடுத்த நிலையில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டோம் இந்த ஆய்வில் காவல் துறை சிறுவர் கூர்நோக்கு இல்ல அலுவ லர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டோம். மேலும் சிறுவன் கோகுல் ஸ்ரீயின் தாயாரின் வேண்டுகோளின் படி அவரது இல்லத்திலும் விசாரணை மேற் கொள்ளப்படும். ஆய்விற்கு பின் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும் என்றார்.