செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வாயலூர் ஊராட்சியில் இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுடன் கலந்துரையாடினர். உடன் மாவட்ட சமூக நல அலுவலர் ச.சங்கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் .