செங்கல்பட்டு, ஜூன் 8 – சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூனாம்பேடு ஊராட்சியில் முறைகேடு செய்த அலுவலர் மீது குற்றவியல் மற்றும் துறைவாரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சூணாம்பேடு ஊராட்சியில் 2017-18ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சி.துரை, தந்தை பெயர் சின்னையன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய வீட்டினை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த துரை என்பவருக்கு ஒதுக்கீடு செய்து 4 தவணைத் தொகைகள் வழங்கி முறைகேடு செய்த முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டெல்லாபாய், பத்மா ஜானகி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.n ஜயக்குமார் மற்றும் ரமேஷ், உதவி பொறியாளர் செந்தில் நாதன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் இளங்கோ ஆகியோர் மீது சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.