வேலூர். மார்ச் 1 - ரேசன் கடையில் முறையாக பொருட்கள் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காத்தாடி குப்பம் ரேசன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை வழங்க வேண்டும், சட்டப்படியான கூலி வழங்க வேண்டும், தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும், காத்தாடி குப்பம் சமுதாயக் கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், காத்தாடிக்கு குப்பம் - தட்டப்பாறை சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் எஸ்.வேண்டா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் எஸ்.டி.சங்கரி, மாவட்டத் தலைவர் எஸ்.குமாரி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.தாரணி ஆகியோர் பேசினர். சுலோச்சனா, ஜெ.கிருஷ்ணவேணி, காஞ்சனா, எஸ்.கஸ்தூரி, ஆர்.ராஜேஸ்வரி, ஆர்.லதா, கன்னியம்மாள், ஆர்.வள்ளி, நதியா, எஸ்.உமா, சாந்தி, குணா, ஜி.சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.