வேலூர், ஜூன் 3- வேலூர் அறிவியல் மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் எந்திரனியல் பயிற்சிக்கு பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் 5ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான “எந்திரனியல் பயிற்சி பட்டறை” வரும் 8ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதிகளில் 2 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சி பட்டறையில் இ.வி.3 ரோபாட்டின் பாகங்களை தொகுத்து வடிவமைத்து செயல்முறைப்படுத்த விரிவான பயிற்சி அளிக்கப்படும். பங்குபெற விரும்பும் பள்ளி மாணவர்கள் தங்கள் பெயர்களை மாவட்ட. அறிவியல் மையம், தேசிய நெடுஞ் சாலை, சத்துவாச்சாரி வேலூர் என்ற முகவரியில் நேரில் முன்பதிவு செய்யவேண்டும். பயிற்சிப்பட்டறைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். முன்பதிவு முதலில் வரும் 30 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பதிவு செய்ய 7ஆம் தேதி கடைசி நாள். மேலும் தகவலுக்கு 0416-2253297, 2252297 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என வேலூர் அறிவியல் மைய அலுவலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.