districts

இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை: கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் வேதனை

வேலூர் டிச 11 -  தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க  மாநிலத் தலைவர் அ.சேகர், மாநில பொதுச் செயலாளர் பொன். ஜெயராம் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு : பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் அலுவ லகங்கள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிர்வாக சீரமைப்பு காரணமாக கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து அமைச்சுப் பணியாளர்களுக்கும் அவசர கதியில் கட்டாய பணிமாறுதல் வழங்கப் பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்ட னர்.  அவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கும், நிர்வாக சீரமைப்பு காரணமாக பல்வேறு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும்  ஆசிரியர்கள் அலுவலகப் பணி யாளர்களுக்கும் அக்டோபர் மாதம்  முதல் ஊதியம் பெற்று வழங்குவ தற்கான நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை நிர்வாகம் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்றைய தேதிவரை ஊழியர் கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதியமின்றி கடுமையான மனஉளைச்சலுக்கு இடையே பணியாற்றி வருகின்றனர்.  இதனை கண்டித்து தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் ஊதிய பிரச்சனைக்கு இதுவரை பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தால் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.  உடனடியாக அனைத்து ஊழியர்க ளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊதி யத்தை பெற்று வழங்க  துரித நடவ டிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், அதற்கு முன்பாக அக்டோபர், நவம்பர்  மாதத்திற்கான ஊதிய முன்பணம் உடனே பெற்று வழங்க வலியுறுத்தி யும் எதிர்வரும் டிச 20 செவ்வாய்க் கிழமை முதல் சென்னை பள்ளிக் கல்வித்துறை  அலுவலகத்தில்‌ தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலு வலர்கள் சங்கத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.