வேலூர், நவ. 20 - வேலூர் மாவட்டம், பாலாற்றில் மேல்மொணவூர் - திருமணி கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரி சுமார் 8 ஆண்டுகளாக கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பெய்துவரும் மழையால் பாலாற்றில் தண்ணீர் வந்ததால் மொரம்பு மண் கொண்டு அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் திருமணி - மேல்மொணவூர் இடையே தரைப்பாலம் அமைக்கக் கோரி பாலாற்று தண்ணீரில் இறங்கி கிராம மக்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.