districts

img

மகத்தான போராளியை கட்சி இழந்துள்ளது

வேலூர், டிச. 17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட  குழுவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மறைந்த தோழர் ப.சக்திவேல் படத்திறப்பு விழா மற்றும் குடும்ப  பாதுகாப்பு நிதியளிப்பு கூட்டம் அவரது சொந்த கிராமமான அகரம் சேரியில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி தலைமையில் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பங்கேற்று தோழர் சக்திவேலின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ரூ.3 லட்சம் வைப்புத் தொகையாக அவரது குடும்பத்திற்கு வழங்கினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர்கள்  ஐ.ஆறுமுகநயினார், எஸ்.டி.சங்கரி, ராணிப்பேட்டை அமைப்பாளர் செய லாளர் என்.காசிநாதன், திருவண்ணா மலை மாவட்டச் செயலாளர் சிவக்குமார், மலைவாழ் மக்கள் சங்க  மாநில பொதுச் செயலாளர் சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், எம்.பி.ராமச்சந்திரன், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், செ.ஏகலைவன், எம்.இந்துமதி, சீனிவாசன் மற்றும் மாவட்டக்குழு, இடைக்கமிட்டி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

தோழர் சக்திவேல் கட்சியில் சேர்ந்து படிப்படியாக வளர்ந்து மாவட்ட தலைமைக்கு உயர்ந்தார். அவருடைய இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பாகும். ஒரு மகத்தான போராளியை கட்சி இழந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப் பட்டோர் மற்றும் உழைப்பாளி மக்களுக்காக போராடி வந்த ஒரு தலைவனை இவ்வமைப்புகள் இழந்திருக்கின்றன. கட்சியின் அனைத்து அமைப்பின் பணிகளில்  துடிப்பான முறையில் செயல்பட்டவர்.

நான் விவசாயிகள் சங்க மாநில செயலாளராக இருந்தபோது வேலூரில் நடைபெற்ற விவசாய சங்க மாநில மாநாட்டில் தயாநிதி யோடு இணைந்து மாநாட்டு பணி களை இரவு-பகல் பாராமல் முன்னெடுத்தவர் தோழர் சக்திவேல் அனைவரிடமும் மிக எளிமையாக பழகக்கூடிய சக்திவேல் வேலூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல கட்சிக்கும்  பேரிழப்பாகும். அவரது குடும்பத் திற்கு ஆதரவாக எப்பொழுதும் கட்சி  நிற்கும். அதே போன்று அவரது குடும்ப மும் கட்சியோடு இணைந்திருக்கும்.

தோழர்கள் அனைவரும் தங்கள்  உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உடல் நலத்தில் கவனம்  செலுத்தாததால் தோழர் சக்திவேலை இழந்திருக்கிறோம். அவர் விட்டு சென்ற பணியை தொடர்ந்து முன்னெடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.