districts

img

அரசு பேருந்து சிறை பிடிப்பு

வேலூர், அக். 20- வேலூர் மாவட்டம் அமிர்தியில் வன உயிரின பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் ஏராள மானோர் தினசரி வந்து செல்கின்ற னர். விடுமுறை நாட்களில் அதி களவில் சுற்றுலா பயணிகள் வரு கின்றனர். நாக நதி கூட்ரோட்டில் இருந்து அமிர்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது. இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சாலை முழுவதும் சேறும் சகதியுமாக, குண்டும் குழியு மாக காட்சியளிக்கின்றன. சில இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அதிக அளவில் விபத்துகளும் நடக்கிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை சீரமைக்கக் கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் வியாழக்கிமை நஞ்சுக்கொண்டாபுரம் கிராம மக்கள் அமிர்தியிலிருந்து வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் சீதா தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் கன்னியப்பன் ஆகியோர்  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை சீரமைப்பது குறித்து வனத்துறை மற்றும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.