வேலூர், ஜன. 28- விஐடியில் வேலை வாய்ப்பு துறையும் இயந்திர வியல் துறை சார்பில் வரும் 3ஆம் தேதி காலை 10 மணிக்கு விஐடி அண்ணா அரங்கத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வளாக நேர்முக தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் டிப்ளமோ, பட்டய படிப்பை முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம். இதில் இந்தி யாவின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான பாஸ்ட் சோலார், டிவிஎஸ் வேலி யோ, பிரேக்ஸ் இந்தியா, இன்டோ கூல், டெக்னிப் எனர்ஜிஸ், மெக்டர் மார்ட் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதற்கான நுழைவு சீட்டினை தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளலாம். டிப்ளமோ படித்து முடித்த வர்கள் விஐடியில் உள்ள சில்வர் ஜூப்ளி டவர் 7ஆவது மாடி, அறை எண் 717இல் வரும் 1ஆம் தேதிக்குள் அனைத்து வேலை நாட்க ளில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த நேர்முகத் தேர் விற்கு வருவோர்கள், கல்விச் சான்றிதழ்கள், ஆதார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வர வேண்டும். இதில் வேலூர் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த டிப்ளமோ படித்த வர்கள் கலந்து கொள்ள லாம். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை, டிப்ளமோ படித்தவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வேலை வாய்ப் பினை பெற்று பயனடை யுமாறு விஐடி வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.