வேலூர், நவ. 10- வேலூர் விஐடியில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப தொலைநோக்கு என்ற தலைப்பில் கருத்தரம் நடைபெற்றது. இந்தி யாவின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் டாக்டர் ஆர்.சிதம்பரம் கலந்து கொண்டு பேசுகையில், “ஆராய்ச்சி யின் தேவைகள், அதற்கு கல்வி நிறு வனங்களின் முக்கிய பங்கு குறித்தும், ஆசி ரியர்கள், மாணவர்கள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பாடுபட வேண்டும்” என்றார். இந்தியா பொருளாதார ரீதியாக வளர அறிவியல் ரீதியாக மேம்பட்ட மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்தும் எடுத்து ரைத்தார். விஐடி துணைவேந்தர், இணை துணை வேந்தர், பதிவாளர், துறை தலைவர்கள் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு கல்லூரி மாணவர்களும் ஆன்லைன் வழியாக பங்கேற்றனர்.