districts

img

ஒன்றிய பாஜக அரசின் விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேலூர். பிப். 17 - ஒன்றிய பாஜக அரசின் விவசாயிகள் விரோத பட்ஜெட்டையும், மாநிலத் தலைவர் ப.சண்முகம் மீதான தாக்குதலை கண்டித்தும், ஆம்பூர் சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்டம் அக்ராவரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் கோபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், தலைவர் ப.சக்திவேல், நிர்வாகிகள் கோவிந்தன், விஜயா, சத்யா, மகாலட்சுமி, முருகேசன், அன்பு, ஜெகநாதன், கோவிந்தராஜ், விஜி, சிஐடியு நிர்வாகிகள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன் ஆகியோர் பேசினர்.