districts

வேலூரில் புத்தகத்திருவிழா நடத்த சிபிஎம் கோரிக்கை

வேலூர், ஜன. 1 - வேலூரில் புத்தகத் திருவிழா நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.தயாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் முன்னெடுப்பு மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் புத்தக திருவிழாக்கள் நடை பெற்று வருகிறது. வேலூரில் இருந்து பிரிந்து சென்ற ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் வேலூரில் இதுவரை நடைபெறவில்லை. இதனால் வாசிப்பு பழக்கம், தன்னார்வ சேவைகள் போன்றவற்றில் குறிப்பிடதக்க முன்னேற்றம்  ஏற்பட்டுள்ளது. எனவே வேலூரில் புத்தகத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேலூர் மாநகரில் பொது நிகழ்ச்சிகள் நடத்திட பொறுத்தமான இடம் இல்லை. எனவே பயன்பாட்டில் இல்லாத அண்ணா கலையரங்கம் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கீத சபாவை புதுப்பித்து பொதுநிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.