வேலூர், ஏப்.3- கச்சத் தீவு விவகாரம் குறித்து பிரதமர் போடும் நாடகம் எடுபடாது என்றும், அவர்கள் போடும் ஆட்ட மெல்லாம் சிறிது நாட்களுக்குத் தான் என்றும் முதல்வர் மு.க ஸ்டா லின் கூறியுள்ளார்.
வேலூர் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி யின் மக்களவைத் தேர்தல் பரப்பு ரைப் பொதுக் கூட்டத்தில் அரக் கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகி யோரை அறிமுகப்படுத்தியும், அவர்களுக்கு வாக்கு கேட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார்-
நினைவில் இருக்கிறதா?
2014-இல் ஆட்சிக்கு வந்த பாஜக “கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என் றால் இலங்கை அரசுடன் போரில் தான் ஈடுபட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் கூறியது.
இரண்டாவது, இப்போது வெளி யுறவுத் துறை அமைச்சராக இருக் கும் திரு. ஜெய்சங்கர் அவர்கள், “2015-இல் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்தபோது கொடுத்த தகவலில், கச்சத்தீவு இந்தி யாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை” என்று, கூறினார். இப்போது தேர்தல் வருகிறது என்று தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி தகவலை மாற்றிக் கொடுத்திருக்கி றார்கள். இந்த அந்தர் பல்டி ஏன்?
மூன்றாவது, கடந்த பல ஆண்டு களாக கச்சத்தீவு பற்றி நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பிய போதெல்லாம், அதற்கு உரிய பதி லைச் சொல்லவில்லை. எத்த னையோ பேர் R.T.I. விண்ணப்பம் செய்தபோதும் தெளிவான தக வல்களைக் கொடுக்கவில்லை.
தனிநபருக்கு கிடைத்தது எப்படி?
உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்று பதில் சொல்லா மல் இருந்த பாஜக அரசு – இப் போது R.T.I. மூலம் எப்படி தவ றான தகவலைக் கொடுத்தது? பாஜகவைச் சேர்ந்த ஒரு தனி நபருக்கு எப்படி, வெளியுறவுத் துறை நாட்டின் பாதுகாப்பு தொடர் பான ஆவணங்களைக் கொடுத்தி ருக்கிறார்கள்?
நான்காவது, கச்சத்தீவிற்காக இப்போது திடீர் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டு களில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப் பாக்கிச்சூடு என்று நடந்ததே? ஒரு கண்டிப்பாவது இலங்கைக்குச் செய்தாரா? ஏன் செய்யவில்லை?
கச்சத் தீவைக் கேட்டு இலங்கையிடம் பேசினீர்களா?
இந்தப் பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி, எத்தனை முறை இலங்கைக்குப் பயணம் செய்தார். அப்போதெல்லாம் ஒருமுறையா வது கச்சத்தீவை மீண்டும் கேட்டி ருக்கிறாரா? இலங்கை அதிபரைச் சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவிற்குதான் சொந்தம் என்று சொல்லியிருக்கிறாரா? அப் போதெல்லாம் கச்சத்தீவு மோடி யின் ஞாபகத்திற்கு வரவில்லை.
மனுவையாவது படித்துப் பார்த்தீர்களா?
கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் நாள் சென்னைக்கு வந்து, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைத் தர வேண்டும். நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்தேன்… அந்தக் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக நான் வைத்ததே, “கச்சத்தீவை மீட்டெடுக்க வேண் டும்... மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண் டும்” என்றுதான். ஞாபகம் இருக்கி றதா? அந்தக் கோரிக்கை மனுவை யாவது இதுவரை படித்துப் பார்த் தீர்களா… எத்தனை கதைகள்… எத் தனை நாடகங்கள்…
பிரதமர் மோடி அவர்களே… நீங் கள் போடும் நாடகம் எல்லாம் இன் றும் சிறிது நாட்களுக்குத்தான் என் பதை எச்சரிக்கையாகச் சொல்ல விரும்புகிறேன்.
மக்கள் கோபம் அதிகமாகி விட்டது
பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் அப்பட்டமாகத் தெரி கிறது. தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடா ததை எல்லாம் செய்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூ னிஸ்ட் கட்சிகளுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி யிருக்கிறார்கள். இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் அறி விக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 1 அன்று)உச்சநீதிமன்றத் தில் வருமான வரித்துறை ஆணை யர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் முடியும் வரை நடவடிக்கை களை நிறுத்தி வைக்கிறோம் என்று சொல்லிப் பின்வாங்கியிருக்கிறார் கள்.
சிறுபான்மையினருக்குத் துரோகம் செய்தவர் பழனிசாமி
அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்தினார் பழனிசாமி! இப்போது பாஜக வுடன் கள்ளக்கூட்டணி வைத்துக் கொண்டு, புதியதாக சிறுபான்மை யினர் மேல் அக்கறை வந்தது போன்று நடிக்க ஆரம்பித்திருக்கி றார்!
2019-இல் மாநிலங்களவை யில், அதிமுகவும் - பாமகவும் ஆத ரித்து ஓட்டு போட்டதால்தான், சிஏஏ சட்டம் இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வந்திருக்கிறது! எவ்வளவு பெரிய துரோகத்தைச் சிறுபான்மையின மக்களுக்கு செய்துவிட்டு, இப்போது அந்தச் சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்வது, பசப்பு நாடகம் இல்லையா?
திமுகவும் தோழமைக் கட்சிகளுமே எதிர்த்து நின்றோம்
இந்த சிஏஏ சட்டம் வந்தபோது, திமுகவும் தோழமைக் கட்சிகளும் தான் உறுதியாக நாடாளுமன்றத் தில் குரல் கொடுத்து, எதிர்த்து வாக் களித்தது. பழனிசாமி என்ன செய் தார்? நாடாளுமன்றத்தில் குடியுரி மைத் திருத்தச் சட்டத்தை ஆத ரித்தது மட்டுமல்ல, ”அதில் எந்த முஸ்லிம் பாதிக்கப்படுகிறார்” என்று, அட்டர்னி ஜெனரல் மாதிரி ’லா பாய்ண்ட்’ எல்லாம் பேசினார்! இந்தச் சட்டத்தை எதிர்த்து அமை தியாகப் போராடிய மக்கள்மேல், பெண்கள் - குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் லத்தி சார்ஜ் செய்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்துச் சென் னையில் போராடிய என் மீதும், மரி யாதைக்குரிய ப. சிதம்பரம் - சகோ தரர் திருமாவளவன் – தோழர் பால கிருஷ்ணன் – மரியாதைக்குரிய ஜவாஹிருல்லா - தம்பி உதயநிதி உள்ளிட்ட எட்டாயிரம் பேர் மேல் ஒரே நேரத்தில் F.I.R. போட்டு மோடிக்கும் – அமித்ஷாவுக்கும் தன்னுடைய விசுவாசத்தை வெளிக்காட்டினார் பழனிசாமி!
பதவி சுகத்திற்காக பச்சைத் துரோகம்
“சி.ஏ.ஏ. ரத்து செய்வதற்கு சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த உடனே…” ஒட்டுமொத்த அதி முக எம்எல்ஏக்களுடன், அவை யை விட்டே ஓடிவிட்டார் பழனி சாமி!
குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு மட்டுமல்ல, பதவி சுகத்தை அனுபவிக்க, நம்முடைய தமிழ் நாட்டு மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தார் பழனிசாமி! மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித் தார். “எந்த விவசாயி பாதிக்கப்படு கிறார், நான் விவாதம் நடத்தத் தயா ராக இருக்கிறேன்” என்று உழ வர்களின் துயரத்தைப் பார்த்து ரசித் துக்கொண்டே, பச்சைத் துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தார் பழனிசாமி.
நாதஸ் திருந்திட்டான் என்ற கதைதான் பழனிசாமிக்கும்
இந்த லட்சணத்தில் “நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம்… எப்படி மோடியை எதிர்க்க முடி யும்… ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்ப்பேன்” என்ற வியாக்கியா னம் பேசுகிறார்.
கரகாட்டகாரன் படத்தில் கவுண் டமணி காமெடி வருமே, “நாதஸ் திருந்திட்டான்…” என்று அது போன்று இப்போது பேசிக் கொண்டு, வாக்கு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
சிஏஏ சட்டம் வந்தபோது, திமுகவும் தோழமைக் கட்சிகளும்
தான் உறுதியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, எதிர்த்து வாக்களித்தது. பழனிசாமி என்ன செய்தார்?