வேலூர்,ஜன.19- வேலூர் மாவட்டம், அணைக் கட்டு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு எருது விடும் போட்டிகள் நடை பெறுவது வழக்கம். கோவிந்த ரெட்டிபாளையம் கிராமத்தில் நடந்த போட்டியில் கலந்து கொள்ள வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளில் இருந்தும் ஏராள மான காளைகள் கலந்து கொண்டன. ஒன்றின் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை பார்த்த பொது மக்களும் இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர். இதில் காளைகள் முட்டியதில் 5 பேர் படு காயமடைந்தனர். இந்த நிலை யில், பாகுபலி என்ற காளைக்கு ஓடிக்கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது. அணைக்கட்டு அடுத்த பாக்கம் பாளையத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்க வந்தன. விழாக் குழுவின் மூலம் காளை களுக்கு காலையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப் பட்டது. மேலும் மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை கள் முட்டியதால் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த னர். போட்டியின் இறுதியில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை ஓடி கடந்த காளை களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.