districts

img

ராஜபாளையம் -தென்காசி சாலையில் லாரி மோதி பெண் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெற்கு காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண் லாரி மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சமயபுரம் தெருவைச் சேர்ந்த ஜனகன் என்பவரது மனைவி பொன்னழகு வயது 31. ஜனகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பொன்னழகு இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது தென்காசி சாலையில் தெற்கு காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும்போது சாலை ஓரமாக இருந்த மணல் சறுக்கி கீழே விழுந்தார். அப்போது அந்த பகுதி வழியாக சேலத்திலிருந்து கடையநல்லூர் நோக்கி சோப்பு பாரம் ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி இவர் தலை மீது  மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தகவல் கிடைத்தவுடன் ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான பொன்னழகு திமுக மகளிர் அணி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.