விருதுநகர், ஜன.13- விருதுநகரில் சேதம டைந்த சாலையில் பாஜக வினர் மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தினர். இத னால், போட்டியில் பங்கேற்ற வீரர்கள் பெரும் அவதிக்குள் ளாகினர். விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி தமிழ கத்தின் பல்வேறு இடங்க ளில் பாஜகவினர் மாரத்தான் ஓட்டப் போட்டியை நடத்தி னர். இந்த நிலையில் விருது நகர் கச்சேரி சாலையில் மாரத் தான் ஓட்டப் போட்டி வியாழ னன்று காலை நடைபெறும் என பாஜகவினர் விருதுநகர் முழுவதும் விளம்பரம் செய்திருந்தனர். இச்செய்தியை அறிந்து, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனை கள் இப்போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். இப் போட்டி தொடங்கிய கச்சேரி சாலையிலிருந்து ரயில்வே பீடர் சாலை வழியாக, ராம மூர்த்தி சாலை, அல்லம்பட்டி முக்கு ரோடு, கருமாதிமடம், கிருஷ்ணமாச்சாரி சாலை, பி1,பி1 சாலை, பி2.பி2 சாலை, மதுரா கோட்ஸ் காலனி வழி யாக மீண்டும் ரயில்வே பீடர் சாலை வழியாக ஓடி வந்து கச்சேரி சாலையை அடைய வேண்டுமென இலக்கு நிர்ண யம் செய்யப்பட்டிருந்தது. போட்டி தொடங்கப்பட்ட சில மீட்டர் தூரத்திலேயே ரயில்வே பீடர் சாலை உள் ளது. அச்சாலை முழுவதும் சேதமடைந்து இருந்தது. இதை சீரமைக்க நகராட்சி நிர்வாகமானது, கடந்த ஒரு வார காலமாக மராமத்துப் பணியை செய்து வருகிறது. இதைக்கூட போட்டியை நடத்தும் பாஜகவினர் பார்க்கவில்லை. இதனால் கால்களில் காலணி ஏதும் அணியாமல், இச்சாலையில் ஓடிய வீரர்களின் கால் களை அங்கு கொட்டி வைத் திருந்த ஜல்லிக் கற்கள் பதம் பார்த்தன. பலர் அவ்வழி யே ஓடுவதற்கு மிகவும் சிர மப்பட்டனர். இப்போட்டி யில் பங்கேற்ற சிறுமிகள் மற்றும் சிறுவர்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து பொதுமக் கள் கூறுகையில், பாஜக வினர் தங்களது வெற்று விளம்பரத்திற்காகவே இந்த மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளனர். உண்மை யிலேயே மிகுந்த அக்கறை யுடன் இப்போட்டியை நடத்தி யிருந்தால் கண்டிப்பாக வீரர் கள் ஓடுவதற்கு இந்த சாலை யை தேர்வு செய்திருக்க மாட்டார்கள். மேலும், இது போன்ற மோசமான சாலை வழியாக மாரத்தான் போட்டி யை பாஜகவினர் நடத்த காவல்துறையினர் எவ்வாறு அனுமதி வழங்கினர் என் றும் கேள்வி எழுப்பினர்.