districts

img

பாரம்பரிய இசை, கலாச்சாரத்தை மேம்படுத்த 73 வயது முதியவர் மிதிவண்டி பயணம்

விருதுநகர், பிப்.14- இளைஞர்களிடையே இந்திய பாரம் பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்  படுத்த வேண்டும் என காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 73 வயது முதியவர்  மிதிவண்டி  பயணம் செய்து வருகிறார். புது தில்லி ஐஐடி முன்னாள் பேராசிரி யரும், பத்மஸ்ரீ விருது பெற்றவர் கிரண்  சேத் (73). இவர், இந்திய பாரம்பரியத்தை யும், கலாச்சாரத்தையும் மேம்படுத்துவது டன், அதனை பாதுகாப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி  காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை  சைக்கிளில்  பயணம் செய்து  வருகிறார்.   கடந்த ஆகஸ்ட்  15 ஆம் தேதி அன்று காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் தொடங்கிய இந்த சைக்கிள் பயணத்தை தொடங்கிய இவர்,  பல்வேறு மாநிலங்கள் வழியாக தமிழகத்திற்கு வந்துள்ளார். செவ்வாயன்று விருதுநகர் வந்த டைந்த அவர், செய்தியாளர்களிடம் கூறு கையில், தமிழகம் உள்ளிட்ட பெரும் பாலான மாநிலங்களில் கலாச்சாரம், பண் பாடு குறித்து இளம் தலைமுறையினர் அறி யாமல் இருக்கின்றனர். எனவே, இந்தியா முழுவதும் உள்ள  பண்பாடு, பாரம்பரியம் குறித்த ஆர்வத்தை இளைஞர்களிடையே அதிகப்படுத்த வேண்டும்.  உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு சைக்கிள் பயணமே சிறந்தது. சைக்கிள் பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை.  மகாத்மா காந்தியின் எளிய வாழ்க்கை முறையை சிந்தனைகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி  தனது சைக்கிள் பயணத்தை கன்னியா குமரியில் முடிப்பதாக தெரிவித்தார்.