districts

img

பேரிடரை எதிர்கொள்ள 65 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் அமைச்சர் தகவல்

விருதுநகர், நவ.6- தமிழகத்தில் மழையால் ஏற்படும் பேரிடரை சமாளிக்க  65 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்,ராமச்சந்தி ரன் தெரிவித்தார், விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு அருகே  மேற்கு தொடர்ச்சி  மலை அடிவாரத்தில் பிளவக்கல் பெரியார் அணை முழு கொள்ளள வான 47 அடியில் 45 அடி நிரம்பி யது. இந்நிலையில்  மாவட்ட ஆட்சி யர் மேகநாத ரெட்டி தலைமையில், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்தி ரன், பிளவக்கல் பெரியார் மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து முதல்போக பாசனத்திற்கு தண் ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர்  கூறுகையில், வரும் 28 ஆம் தேதி வரை நாள்தோறும் 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும்,  மழையின் அளவை பொறுத்து கூடுதல் தண்ணீர் திறக்க  பரிசீலனை செய்யப்படும். தண்  ணீரை திறப்பதால் பிளவக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 40 கண்மாய் களின் 7 ஆயிரத்து 219 ஏக்கர் விவ சாய நிலங்களும்,பெரியாறு பிர தானக்கால்வாய் நேரடி பாசனத் தின் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடையும். தமி ழகத்தில் பருவமழையை எதிர்  கொள்ள 65 ஆயிரம் களப்பணி யாளர்கள் தயார் நிலையில் உள்ள னர்.   சென்னை போன்ற பெருநக ரங்களில், கடந்த பருவமழை காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் இல்லாத வகையிலும் தண்ணீர் தேங்காமலும் முதலமைச்சர் தலை மையில் ஏற்படுத்தப்பட்ட குழு  நடவடிக்கைகள் எடுத்து வருகின் றன என்றார்.   பின்னர். முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத் திற்கு பதில் கூறிய அமைச்சர்.  கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு சிறந்த முறையில் செய லாற்றி இருந்தால் கடந்த வருடம் ஏன் சென்னையில் மழை நீர் தேங்கி யது,  கடந்த ஒரு வருடமாக திமுக  ஆட்சியில் செய்த முன்னேற்பாடு கள் தான் தற்போது மழை நீர் உட னடியாக வடிவதற்கு காரணம் என தெரிவித்தார்.

;