விருதுநகர், நவ.7- விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவல ராக பணிபுரிந்து வருபவர் ஞானகௌரி. இவர், பேரா பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரி யர் இராஜ்சுதாஸ் என்பவரை வேறு ஊருக்கு மாறு தல் செய்துள்ளார். இதனைக் கண்டித்தும், மாநில கலவிக் கொள்கைக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசி ரியர்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறை யினரை வைத்து மிரட்டியதைக் கண்டித்தும் இந்திய ஆசிரியர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு டி.என்.பி.டி.எப் மாவட்டச் செயலாளர் வைரமுத்து தலைமைதாங்கி னார். டி.என்.பி.ஜி.டி.ஏ மாவட்டத் தலைவர் முத்தையா, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலு வலர் கூட்டமைப்பின் துரைச்சாமிபாண்டியன் ஆகி யோர் விளக்கிப் பேசினர். பல்வேறு சங்கங்களின் மாநில நிர்வாகிகளான மணிமேகலை, பெருமாள்சாமி, அன்பழகன், இரவிச் சந்திரன், மாயவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.