districts

img

அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வான விருதுநகர் அரசுப்பள்ளி மாணவி

விருதுநகர், அக்.24- விருதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க  தேர்வாகியுள்ளார். விருதுநகர் லட்சுமி காலனி பகுதியைச் சேர்ந்தவர்  இராஜசேகர். இவர் மதுரை வேளாண்மை அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமியின். இவர்களது  மகள் ஸ்ரீநிதி. இவர் விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார். இவர், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அங்கு படித்துள்ளார். பத்தாம் வகுப்பில் 491, பிளஸ் 2-வில் 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும்,  சமீபத்தில் நடைபெற்ற  மருத்துவக் கல்லூரி நீட் நுழைவுத் தேர்வு எழுதினார். அதில், 321 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  இதையடுத்து,  அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் படிக்க கலந்தாய்வு மூலம்  தேர்வு செய்யப்பட்டார்.  ஸ்ரீநிதி மருத்துவம் படிப்பதற்கான ஆணையை சென்னையில் நடந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். மாணவி ஸ்ரீநிதியை  பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.