விருதுநகர், பிப்.13- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்திற்கு உட் பட்டது பள்ளிமடம் கிரா மம். இங்குள்ள அரசுப் பள் ளிக் கட்டடத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பிளா ஸ்டிக் அரவை இயந்திரம் பொருத்தப்பட்டது. அந்த இடம் பள்ளி மாணவர்கள் உணவு சாப்பிடும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகி றது. அதில் பாதி இடத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஊராட்சி நிர்வாகத்தினர், மும்முனை மின் இணைப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு அரவை இயந்திரம் பொருத்தப் பட்டுள்ளதால், பள்ளிக் குழந் தைகள் உணவு உண்ண இட மில்லாத நிலை உருவாகி யுள்ளது. பெரும் சப்தத்தால் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதற்குப் பெரும் இடை யூறு ஏற்படும் எனக் கூறப்படு கிறது. பொருத்தப்பட்ட இயந்தி ரத்தை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சி யர் ஜெயசீலன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.