districts

img

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக்கூட்டம்

திருவில்லிபுத்தூர், செப்.10- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழுத் தலை வர் சிந்து முருகன் தலைமை வைத்தார். துணை தலைவர் ரேகா முன்னிலை வகித்தார். துணை தலைவர் ரேகா பேசுகையில்,  ராமசாமியாபுரத்தில் குப்பை அள்ளுவதற்கு துப்புரவு பணியாளர்கள் வராதது, தெரு  விளக்கு எரியாததால் பொதுமக்கள் போராட்டம் நடத்த இருக்கின்ற னர் என்றார். தலைவர் சிந்து முருகன் பேசுகையில்,  தெரு விளக்கு கள் உடனடியாக சரிசெய்யப்படும். தம்பிபட்டி ஓடையை சீரமைக்க நட வடிக்கை எடுக்கப்படும். சேதுநாரயணபுரம் ஓடை நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள பணியாளர்கள் மூலம் சீரமைக்கப்படும், என்றார்.   கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், சத்தியசங்கர், பொறியாளர் தீபக்ராஜ், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பால கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;