வெம்பக்கோட்டை, ஜூன் 24- விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டு மென அனைத்துக் கட்சியினர் மற்றும் ஆலை பாதுகாப்புக்குழுவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியப் பகுதியானது மிகவும் பின்தங்கியதாகவும், வறட்சி மிகுந்ததாக வும் இருந்தது. எனவே, அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என 1960களில் அன்றைய முதல்வர் காமராஜர் முடிவு செய்தார். உடனடியாக நிபுணர்களை அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளச்செய்தார்.
100 ஆண்டுகளுக்கு தேவையான மூலப்பொருள்
அப்போது, ஆலங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலப் பகுதியில் சிமிண்ட் தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப் பொருளான லைம் ஸ்டோன் என அழைக்கப்படும் சுண்ணாம்புக்கல் பெருமளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கு சிமிண்ட் ஆலை துவங்கப்பட்டால் 100 ஆண்டு களுக்கு தேவையான சுண்ணாம்புக் கற்கள் உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் 1966ல் ஆலங்குளம் சிமிண்ட் தொழிற்சாலை துவங்க அடிக்கல் நாட்டினார். அப்பகுதி விவசாயிகளும் ஆலை அமைக்க தங்களது விளை நிலங்கள் சுமார் 3500 ஏக்கரை அரசுக்கு வழங்கினர். அதன் பிறகு பொறுப்பேற்ற திமுக ஆட்சியில் ரூ6.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 1970ல் ஆலையில் உற்பத்தி துவங்கியது. ஆசியாவிலேயே குளிர் பதனமுறையில் சிமிண்ட் தயாரிக்கும் ஒரே தொழிற்சாலை ஆலங்குளம் சிமிண்ட் ஆலையாகும். இங்கிருந்து ஈரான் நாட்டிற்கு சிமிண்ட் ஏற்றுமதி செய்யப்பட்டது. அந்த அளவிற்கு தரமான சிமிண்ட் தயாரிக்கப்பட்டது.
ஆலையில் 2 ஆயிரம் பேர் நிரந்தர தொழி லாளர்களாக பணியாற்றினார். ஆலை தொடர்ந்து இயங்கவே, ஆலங்குளம் முக்கு ரோடு என்ற பகுதி உருவானது. பின்பு, அதைச் சுற்றி ஏராளமான கடைகள், வணிக நிறு வனங்கள் உருவாகின. இந்த ஆலையின் வருகையால், மறைமுகமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.
தனி ரயில் பாதை
ஆலை வளாகத்தில் பூங்கா, காவல் நிலை யம், மின்வாரிய அலுவலகம், பேருந்து நிறுத்து மிடம், பி.எஸ்.என்.எல் அலுவலகம், அமைச்சர் கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கிச் செல்ல விடுதி ஆகியவை அமைக்கப்பட்டன. மூலப் பொருட்களை கொண்டு வரவும், சிமிண்ட் ஏற்றுமதி செய்யவும் ஆலங்குளம்-சிவகாசி வரை தனி ரயில் பாதை அமைக்கப்பட்டது.
சுண்ணாம்புக் கல் வெட்டிய இடத்தில் ஏற்பட்ட நீர் ஊற்றின் மூலம் கரிசல்குளம், ஆலங் குளம், சுண்டங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசு கட்டிடங்கள் கட்ட ஆலங் குளம் சிமிண்ட் பெருமளவில் பயன்பட்டதால், ஆலை பெரும் வளர்ச்சியடைந்தது. அதைத் தொடர்ந்து, 1985ல் ஆலங்குளத்தில் அரசு ஆஸ்பெஸ்டாஸ் நிறுவனம் துவங்கப்பட்டது.
நலிவுக்கு காரணம் என்ன?
இந்த நிலையில், நவீன தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக பல இடங்களில் உலர் பதன முறையில் சிமிண்ட் ஆலைகள் வரத் துவங்கின. அதன் மூலம் சிமிண்ட்டை வேக மாக உற்பத்தி செய்ய முடியும்.
தனியார்மயம், தாராளமயக் கொள்கை மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, நிர்வாகச் சீர்கேடு ஆகியவற்றின் விளைவாக, ஆலங்குளம் சிமிண்ட் ஆலை நலிவைச் சந்திக்க ஆரம்பித்து. இதைத் தொடர்ந்து ஆலையை பாதுகாக்க வேண்டும், புனரமைக்க வேண்டு மென சிஐடியு தொடர் போராட்டங்களை நடத்தியது.
ஆனால், ஆளும் அரசுகளோ, ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்வதை குறைத்தன. இதன் காரணமாக படிப்படியாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்பு, ஆஸ்பெஸ் டாஸ் தயாரிப்பது முற்றிலும் மூடப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2014ஆம் ஆண்டு 150 நிரந்தரப் பணியாளர்களை அரியலூர் சிமிண்ட் ஆலைக்கு மாற்ற டான்செம் (தமிழ்நாடு சிமிண்ட் கழகம்) நிர்வாகம் முடிவெடுத்தது. இதுகுறித்து, சிஐடியு சார்பில் பொது மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிர சுரங்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், தாமாக முன் வந்து கடையடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டங்களை தொடர்ந்து நடத்த, நிரந்தரப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலை பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பலனாக ஆலை தொடர்ந்து இயக்கப்பட்டது. லாபத்திலும் இயங்கி வந்தது.
பின்பு, புனரமைப்பு பணிகள் துவங்காத நிலையில், 2022இல் சிமிண்ட் ஆலை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை கலந்து கொண்டார். பின்பு, நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்திலும் வலியுறுத்திப் பேசினார்.
தற்போது 39 நிரந்தர தொழிலாளர்களும், 250ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே ஆலையில் வேலை செய்து வருகின்றனர்.
ஆலையை மூடத் திட்டமா?
இந்நிலையில் ஆலையை இழுத்து மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே, அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, சிமிண்ட் ஆலையை மூடக் கூடாது என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என்பவர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், ஆலையை மூடவோ, தனியாருக்கு மாற்றவோ, விற்கவோ அரசிடம் எந்த திட்டமும் இல்லையென தமிழக அரசின் சார்பில் விளக்க மளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒதுக்கிய பணம் வரவில்லை
ஆலையை நவீனப்படுத்துவதற்காக கடந்த 2008 இல் ரூ.82 கோடி மற்றும் ரூ.160 கோடி, 2011இல் ரூ.165 கோடி, 2015இல் ரூ.190கோடி, 2022இல் ரூ.75 கோடி என தமிழக அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த நிதி ஆலைக்கு வந்து சேரவில்லை. அதன் மர்மம் என்ன என ஆலை பாதுகாப்புக் குழுவினர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் கூறுகையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை தொடர்ந்து நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்த போதும்,ஆலையை நவீனப்படுத்த முயற்சி மேற்கொள்ளாதது வேதனையான விஷயமாகும். பல ஆலைகளில் உலர் பதன முறையில் சிமிண்ட் தயாரிக்கப்படுகிறது. அதற்கான உற்பத்தி செலவு குறைவாகும். ஆனால், ஆலங்குளம் சிமிண்ட் ஆலையில் குளிர்பதன முறையில் சிமிண்ட் தயாரிக்கப்படு கிறது. எனவே, அதை மாற்றி, உலர் பதனமுறை யில் சிமிண்ட் தயாரிக்க அரசு முழுமையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆலை தொடர்ச்சியாக இயங்கினால் 3 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், 10 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பயன் பெறுவர். மேலும் ஆலங்குளம் பகுதி முழுவதும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையும். இப்பகுதியில் சிமிண்ட் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் ஏராளமாக உள்ளன. தொழி லாளர்கள் உள்ளனர். மேலும், ஏற்கனவே, தோண்டி போடப்பட்ட கற்கள் மூலம் எம்-சான்ட் தயாரித்தால் அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைக்கும். எனவே, தமிழக அரசு, ஆலங்குளம் சிமிண்ட் ஆலையில், விரைவில் சிமிண்ட் உற்பத்தியை மீண்டும் துவங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் பொதுத்துறை நிறுவனமான ஆலங்குளம் சிமிண்ட் ஆலையை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது; அதை நவீனப்படுத்திட தேவையான நிதியை உடனே வழங்க வேண்டும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆலை பாதுகாப்புக்குழு சார்பில் முக்குரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இப்போராட்டத்திற்கு பாதுகாப்புக்குழு செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.குருசாமி, எம்.சுந்தரபாண்டியன், சிபிஐ சார்பில் நடராஜன், காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெனடிக்பிரபாகர், ஊராட்சிமன்றத் தலைவர்கள் பசுபதிராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் விளக்கிப் பேசினர். மேலும், தேமுதிக, நாம் தமிழர், பாமக கட்சி நிர்வாகிகள், சிஐடியு, தொமுச, எச்.எம்.எஸ் தொழிற்சங்கத்தினர் உட்பட பலர் பங்கேற்ற னர்.