districts

காலமுறை ஊதியம் வழங்க துப்புரவுத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

விருதுநகர், பிப்.28- விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் துப்பு ரவுத் தொழிலாளர்கள் காலமுறை ஊதி யம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை மனு அளித்த னர். அம்மனுவில், “கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி புரிந்து வருகிறோம். அதேநேரத்தில் கடந்த 2020 ல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென அரசு உத்தர விட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை தற்போது வரை அமல்படுத்தவில்லை. அதேநேரத்தில் பல ஊராட்சிகளில் பணி புரியும் துப்புரவத் தொழிலளார்களுக்கு நிலுவைத் தொகை வழங்கி, காலமுறை ஊதியமும் வழங்குகின்றனர். எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் பணிபுரியம் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு கால முறை மற்றும் நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள் ளனர்.