திருவில்லிபுத்தூர், பிப்.27- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே யுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு பிப்ர வரி 28 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோயிலில் பிப்ரவரி 28 பிரதோஷமும், மார்ச் 1 ஆம் தேதி மகா சிவராத்திரி யும், மார்ச் 2 அமாவாசை வழி பாடுகளும் நடைபெற உள்ளன. இதையொட்டி மலைக் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வா கம் அனுமதி வழங்கியுள்ளது.