districts

img

பாஜகவை வீழ்த்துவதில் ஒன்றுபட்டு நிற்போம்; மக்கள் பிரச்சனைகளுக்கு உறுதியுடன் குரல் கொடுப்போம்

விருதுநகர், ஆக.20- பாஜகவை வீழ்த்துவதில் ஒன்றுபட்டு நிற்போம். மக்கள் பிரச்சனைகளுக்கு உறுதியுடன் குரல் கொடுப் போம் என்று   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித் தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் மண்டல அளவிலான இடைக்குழு செயலாளர்களுக்கான பயிற்சி முகாம் விருது நகரில் ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கே.பால கிருஷ்ணன் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சிறப்புச் சட்டம் இயற்றுக!

தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஆண வப் படுகொலை செய்வது தொடர் நிகழ்வாக நடை பெற்று வருகிறது. இத்தகை நிகழ்வுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதி யர்களை வீடு புகுந்து தாக்கி யுள்ளனர். இச்சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.  

ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்  சட்டம் இயற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி  உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழக  முதலமைச்சர் சட்ட மன்றத்தில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் போதுமானது; தனி சட்டம் தேவையில்லை. இருக்கும் சட்டத்தை வலிமையாக அமல்படுத்தி னால் போதும்  எனக்  கூறியுள்ளார். அதை அவர் மறுபரிசீலனை செய்து,  சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்கிற தம்பதியினரை பாதுகாக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

பாஜகவை வீழ்த்துவதில் உறுதி

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நாணயம் வெளியீட்டு விழாவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அதை திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி அரசியலாக கிளப்பி விடுகிறார். திமுகவுக்கும் பாஜகவுக்கும்  உறவு ஏற்பட்டுள்ளதாக கூறி யிருக்கிறார். தமிழகத்தைப் புறக்கணிப்பது, நிதி கொடுக்க மறுப்பது, மெட்ரோ உள்ளிட்ட பல இரயில்வே திட்டங்களுக்கு நிதி கொடுக்க மறுப்பது போன்ற செயல்களை பாஜக அரசு செய்து வருகிறது. அந்த அரசோடு திமுக உடன்பட்டுச் செல்ல வாய்ப்பு இல்லை. ஒரு  விழா நடந்ததைக் காரணம் காட்டி, ரகசிய உடன்பாடு இருப்பதாக கூறுவது சரியல்ல.   அதை முதலமைச்சரும் தெளிவுபடுத்தியுள்ளார். திமுக பாஜகவை வலுவாக எதிர்க்கிறது. அக்கட்சியுடன் அனைத்து மதச்சார்பற்ற கட்சி களும் பாஜகவை வீழ்த்துவதில் உறுதியாக உள்ளோம்.

பணி நிரந்தரம் செய்க!

தமிழகத்தில் அரசு செய்யும் பல நல்ல காரியங்களை வரவேற்கிறோம். ஆனால், பல்வேறு துறைகளில்  அவுட்சோர்சிங் முறையில் தான் பணியில் அமர்த்துவோம் எனக்  கூறுவதை ஏற்க மாட்டோம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், பேராசிரி யர்கள் ஆகியோரை தொகுப்பூதியம், மதிப்பூதி யங்களிலேயே பணியில் வைத்திருப்பது நியாயம்அல்ல. அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அரசு  சிமிண்ட் ஆலை படிப்படியாக மூடு விழாவை நோக்கிச் செல்கிறது. மதுரையில் உள்ள கூட்டுறவு அரசு சர்க்கரை ஆலை, கூட்டுறவு நூற்பாலைகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியிலும் மூடப்பட்டுள்ளன. அவற்றை திறப்பதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடியிடம் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை

திமுகவுடன் உள்ள தோழமைக் கட்சிகள் அதன் தனித்துவத்தை இழந்துவிட்டன என்றும் மக்கள் பிரச்சனைகளில் எதிர்க்குரல் கொடுப்பதில்லையென  எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், “எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்த்து குரல்  கொடுப்பார் என அவரது ஆட்சியில் பார்த்துள் ளோம். அவரது ஆட்சியில் துப்பாக்கிச் சூட்டில்  13 பேர் உயிரிழந்தனர். இன்றைக்கு தமிழ்நாடு சந்திக்கக் கூடிய பலவிதமான பிரச்சனைகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போது துவக்கி வைத்தது தான்.  போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட டி.ஏ.வை  வழங்காமல் நிறுத்தி வைத்தது அவர் தான். எங்களைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியிடம் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை என்று பதிலடி கொடுத்தார்.

மக்களை பாதிக்கும் பிரச்சனையில் சமரசம் இல்லை. வரும் 28ஆம் தேதி கூட சென்னையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு  எனது தலைமையில் வரி உயர்வு, தூய்மைப் பணி தனியார் மயம் ஆகியவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் எடப்பாடி பழனி சாமியைக் கேட்டு போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை” எனக் குறிப்பிட்டார்.

முல்லைப் பெரியாறு அணை

ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை பலமில்லாமல் உள்ளது என தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், “உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக உள்ளது எனவும், அதன் நீர்மட்டத்தை 142 அடி உயரமாக உயர்த்தலாம் எனவும் கூறியுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லோரையும் கட்டுப்படுத்தும். அதை  அமலாக்க  வேண்டும். புதிய அணை கட்டுவது ஏற்புடையதல்ல   என நாங்கள் தெரிவித்து வருகிறோம். சமீபத்தில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அணை பலவீனமாக உள்ளது என சுரேஷ்கோபி எந்த ஆய்வை வைத்து  தெரிவிக்கிறார்? ஆணையம் எதுவும் அமைத்தாரா? அவர்கூறியதில் என்ன முகாந்திரம் உள்ளது?” எதார்த்தமாக உள்ள மக்களின் அச்ச உணர்வை தங்களுக்கு சாதகமாக சுரேஷ்கோபி பயன்படுத்துகிறார்” எனத் தெரிவித்தார்.

திசை திருப்பும் ரயில்வே அமைச்சர்

மேலும் பல்வேறு கேள்விகளுக்கு பதி லளித்த அவர், “பாட நூல் விலை உயர்வுக்கு பல காரணம் இருக்கலாம். ஆனால், கல்வி யை மையப்படுத்தி பல இலவச திட்டங்களை அமலாக்கிற போது, அதில் நஷ்டம் வருகிறது; கூடுதல் செலவு ஆகிறது என பார்க்க வேண்டியதில்லை. எனவே கட்டண உயர்வு ஏற்புடையதல்ல” எனத் தெரிவித்தார்.

“தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதியைக் கூட இந்த ஆண்டு மோடி அரசு ஒதுக்கவில்லை. மெட்ரோ திட்டத் திற்கு ரூ.63 ஆயிரம் கோடியை தர மறுக்கின்ற னர். தங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வருகிறது என்பதை மறுக்கவே, ஒன்றிய ரயில்வே அமைச் சர், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தித் தரவில்லை எனத் திசை திருப்புகிறார்” எனவும் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாண்டி ஆகியோர் உடனிருந்தனர். (ந.நி.)

ஆகஸ்ட் 29 திண்டுக்கல்லில் சிறப்புமாநாடு

தமிழ்நாடு அரசு அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உள் ஒதுக்கீட்டை வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு  உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியது வரவேற்கத்தக்க அம்சம்.

ஏற்கனவே, விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அருந்ததியர் மக்களுக்கு  உள் இட ஒதுக்கீடுவேண்டுமென வலியுறுத்தி கடந்த 2007ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் மாபெரும் மாநாடு நடத்தினோம். பின்பு சென்னையில் மிகப்பெரிய  பேரணி நடத்தினோம். இதையடுத்து, அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
 

தற்போது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று வரும் ஆக.29 அன்று திண்டுக்கல்லில் மாபெரும் மாநாட்டை நடத்த உள்ளோம்.