districts

img

அனுமதியின்றி ஊருணியில் கிராவல் அள்ளும் பாஜக பிரமுகர்

விருதுநகர், பிப்.13- விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு கிரா மத்தில் அனுமதியின்றி ஊருணியில் 150 லோடு கிராவல் மண் அள்ளிய பாஜக பிர முகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராமத்தினர் ஆட்சியரிடம் புகாரளித்தனர். புகார் மனுவில், “விருதுநகர் அருகே உள்ளது மெட்டுககுண்டு கிராமம். இப்பகு தியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பரமசிவம் திருமண மண்டபம் கட்டி வருகிறார். ஊரில் உள்ள விளை நிலம் மற்றும் அதன் அருகில் உள்ள ஊருணியில் அரசு அனுமதி ஏது வுமின்றி 150 லோடு கிராவல் மண்ணை அள்ளி அதைத் தனது கட்டடத்திற்குப் பயன்  படுத்தியுள்ளார். இதுகுறித்து ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் வட்டாட்சியரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. அரசு விதிமுறைகளை மீறி கிரா வல் அள்ளிய பாஜக பிரமுகர் பரமசிவம் மற்றும் கிராவல் மண் எடுக்கத் துணை போன அரசு அதிகாரிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரி வித்துள்ளனர்.