districts

img

பட்டாசு ஆலை கழிகளை எரித்தபோது வெடிவிபத்து: 2 பேர் பலி  

விருதுநகர் பட்டாசு ஆலையில் கழிவுகளை எரித்தபோது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர் 2 பேர் பலியாகினர்.  

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அம்மன் கோவில்பட்டியில் செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பயர் ஒர்க்ஸ் உள்ளது. நேற்று மாலை வெடிமருந்து கழிவுகளை, ஆலை வளாகத்தை ஒட்டியுள்ள பகுதியில், தொழிலாளர்கள் தீ வைத்து எரித்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஓ.சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனைதொடர்ந்து விருதுநகர் தீயணைப்புத்துறையினரால் 90 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்ட அம்மன்கோவில்பட்டிபுதூரை சேர்ந்த குபேந்திரனும், சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த தெய்வேந்திரனை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  அதில் குபேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த ஆறுமுகம், குபேந்திரன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரனுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

;