விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் பேருந்து நிலையம் எதிரே திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு தொடர் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் கே அர்ஜுனன், சிபிஐ மாவட்ட செயலாளர் லிங்கம், மதிமுக நிர்வாகி நவபாரத் நாராயண ராஜா,திருவில்லிபுத்தூர் தி,க. நிர்வாகி கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.