விருதுநகர், பிப்.20- தமிழ்நாடு அரசு, சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண் டும் எனக் கோரி பத்து ரூபாய் இயக்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் முழுவதும் தாக்கப்பட்டு மிரட்டலுக்கு உள்ளாகும் சமூக ஆர்வ லர்களுக்கும், தகவல் போரா ளிகளுக்கும் உரிய பாது காப்பு வழங்க வேண்டும். மேலராஜகுலராமனைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குரு சாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தகவல் உரிமைச் சட்டத்தை பயன் படுத்திய கேள்வி கேட்ப வர்கள் மீது காவல்துறை மூலம் பொய் வழக்கு பதிவு செய்யக் கூடாது என வலி யுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் பத்து ரூபாய் இயக் கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பொதுச் செயலாளர் நல் வினை விஸ்வராஜூ, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் வி. பாலமுருகன், வீரப்பெரு மாள் உட்பட பலர் பங்கேற்ற னர்.